பாடசாலைக் கீதம்
ஆதி அருள் நாடுவோம்......வல்ல
அல்லாஹ் புகழ் பாடுவோம்......நல்ல
நயமாகவே எங்கள் நபிநா தரின்
ஸல வாத்தும் ஸலா மோதுவோம்!......என்றும் ஆதி அருள்......
உல கெல்லாம்; நிறைந்தவனே.......எம்
உள்ளம் உறைந்தவனே......இன்பம்
பொங்கும் கலை புகழ் தங்கும் கலை......
புவி யோங்கிடத் தந்தருள்வாய்........என்றும் ஆதி அருள்......
உயர் பக்தி நெறி செறியும்......பதி
பொத்துவி லிற்பொலியும்......மத்திய
கல்லூரியும் மலைபோற் றுலங்க
இறைவா நின்னருள் வேண்டினோம்......என்றும் ஆதி அருள்......
சிறு கல்வி பயில்பா லரும்.......பெரும்
ஆசிரி யர்குழுவும்......நிறை
செல்வங் களாய் நிதமும் வாழ்ந்திட
நிலையா னவனைப் போற்றினோம்.......என்றும் ஆதி அருள்...






